Wednesday, December 17, 2008

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

மன்னாரன் கம்பெனி மாதிரில இருக்கு!!!!!
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!































முடியல... நண்பர்களே!!!! இந்த நிலைமை வந்தா யாரவச்சு வேலை பார்பாங்களாம்!!! அதுக்கும் ஆளுங்கள செஞ்சாலும் செய்வாங்க....





Saturday, December 13, 2008

முதல் பெண்மணிகள்

Ø உலகின் முதல் பெண் - பிரதமராய் பதவி வகித்தவர்- சரிமாவோ பண்டார நாயகே
Ø உலகின் முதல் பெண் - ஜனாதிபதியாய் பதவி வகித்தவர்- மரியா எஸ்டெலா பெரோன்
Ø உலகின் முதல் பெண் - போலஸ் - அமெரிக்காவைச் சேர்ந்த ஆலஸ்டெஃபங்ஸ் வெலஸ் - ஆண்டு 1910
Ø உலகின் முதல் பெண் - விண்வெளிப் பயணம் செய்தவர் - வாலென்டினா டெரஸ் கோவா ரஷ்யா நாள் 16.6.1963.
Ø உலகின் முதல் பெண் - விண்வெளியில் நடந்தவர் ஸ்வெட்லானா சவட்ஸ்கயா
Ø உலகின் முதல் பெண் - விமானி மிஸ்யேல் பங்கன்ஸ்பல் - இஸ்ரேல்
Ø உலகின் முதல் பெண் - பாதரியார் - பெனிலோம் ஜாமிசன் - நியுசலாந்து
Ø உலகின் முதல் பெண் - மருத்துவர் - காரட் ஆண்டர்சன்
Ø உலகின் முதல் பெண் - அறுவை மருத்துவர் - எலிசபத் பளக்வெல் - இலண்டன்
Ø உலகின் முதல் ஜ.நா. சுபையல் அங்கம் வகித்தவர்- விஜயலட்சுமி பண்டிட்
Ø உலகின் முதல் சட்டமன்றத் துணைத்தலைவர் - டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
Ø உலகின் முதல் விமான்ப் பணிப்பெண் - எலன்சர்ச்
Ø விண்ணில் உயிர் நீத்தவர் - மேரி கனீவ்
Ø சுயசரிதை எழுதியவர்- பயர்ஸ் ஒயட்
Ø ஒலிம்பிக் தீபம் ஏற்றியவர் - என்ரி குயேட்டா பாசலயோ
Ø தூதர் - ஔவையார்
Ø கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் எடுத்தவர் -சந்தியா அகர்வால்
Ø நாணயத்தில் இடம் பெற்றவர் - மர்தா வாஷிங்டன்
Ø நாட்டை ஆண்டவர் - ஹாஷெப்ஸ்ட் - எகிப்து
Ø அதிக நகை அணிந்தவர் - எலிசபெத் ஹோம்ஸ்
Ø நோபல் பரிசு பெற்றவர் - டாயல்மக் என்னும் நாவலாசரியை
Ø அதிகப் பாடல் பாடி கின்னஸில் இடம் பிடித்த்வர்-லதாமங்கேஷ்கர் (2000 க்கு மேற்பட்ட பாடல்)
Ø நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் விக்டோரியா மகராணி 63 ஆண்டுகள்.
Ø 20 ஆம் றுற்றாண்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் திருமதி. இந்திரா காந்தி.
Ø அதிக விருதுகளை பெற்ற பெண் - அன்னை தெரஸா
Ø உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பெர்தா கன்ஸ்க வான்ஸட்னர்.(ஆஸ்திரேலியா)
Ø முதல் வெளி நாட்டுத்தூதர் அலெக்சாண்டர் குலண்டாய் என்னும் இரஷ்யப் பெண்மணி (நார்வே தூதர்)
Ø உலகை நடந்தே வலம் வந்தவர் பயானோ காம்பெல்
Ø உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மனி 1934 உர்சலா பேட்ஸ்க
Ø நடிப்புக்காக நான்கு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஹேதரின் ஹெப்பர்ன்.
Ø நீண்ட கூந்தலுக்காக கின்னஸில் இடம் பெற்றவர் டயானிவட் கூந்தலன் நீளம் 12 அடி 8 அங்குலம்
Ø அதிக வயதில் பிள்ளை பெற்றவர் அமெரிக்கா கலபோர்னியாவைச் சேர்ந்த அரகல்- வயது 65
Ø தனியே வடதுருவம் அடைந்தவர் முதல் பெண் லப் ஆர்னிசன் (மோரிஸ்)
Ø நீண்ட தாடியுடைய முதல் பெண் ஜெனிபர் தாடியின் நீளம் 1 அடி 2 அங்குலம்.
Ø சிறு வயதில் (4 வயது) புத்தகம் எழுத வெளியட்டவர் டூரோத்த 1962
Ø நீர் மூழ்கக் கப்பலின் தலைமை பொறுப்பு ஏற்ற முதல்பெண் சோல்வக்கரே நார்வே நாடு
Ø அதிக வயது வரை (116) வாழ்ந்து வந்த பெண் பெலாகெயா ஜகூர்தயேவா ரஷ்யா

Friday, October 31, 2008

தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள் ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும்.

மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும். சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

Sunday, October 19, 2008

விபத்துகளும் முதலுதவியும்

இன்றைய வாழ்வில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. கையில் கத்தி போன்ற ஆயுதங்கள் பட்டு காயம் ஏற்படுவது, தீப்பட்டு புண்கள் ஏற்பட்டுவது , மின்சாரம் போன்றவற்றால் தாக்கப்பட்டு மூர்ச்ச்சை அடைவது, தவறியோ வேண்டுமென்றோ சாப்பிடக்குடாத பொருள்களைச் சாப்பிட்டு விடுவது, நீரில் மூழ்கி விடுவது இப்படி எத்தனையோ விபத்துகள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்து வருகின்றன. அவை சிறியவைகளாகவோ, பெரியவைகளாகவோ இருக்கலாம்.
இவற்றால் காயங்களும் ,அதிர்ச்சியும் , ஆபத்தும் ஏற்படுகின்றன.காயங்கள் மிகச்சிறியவையாகவும் சாதாரணமானவையாகவும் இருக்கலாம். சில நேரங்களில் அவை பலத்தவையாகவும் , உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியவையாகவும் இருக்க கூடும்.




  1. விபத்து ஏற்பட்டதும் செய்வது அறியாது திகைத்து நிற்கலாகாது. முறை தெரியாமல் சிகிச்சை அளிக்க முயன்றால் அது ஆபத்தில் முடியக் கூடும். எனவே முதல் உதவி பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. விபத்துக்கு உள்ளானவருக்கு உடனடியாகவும் , மருத்துவரின் உதவி கிடைக்கும் வரையிலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

    ஒவ்வொருவரும் முதல் உதவியைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ , அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவிப் பெட்டி ஒன்று இருப்பதும் முக்கியம். ஆனால் நம்மில் ஒரு சிலரின் வீடுகளில் தான் அதிசயமாக முதல் உதவிப்பெட்டியைக் காண முடிகிறது. பெரும்பாலனவர்களின் வீடுகளின் மூதல் உதவி பெட்டியோ அல்லது அதற்குத் தேவையான பொருட்கள் இருப்பதில்லை. வாகனங்களிலும் , பள்ளி போன்ற இடங்களிலும் முதல் உதவி பெட்டி இருப்பது அவசியம்.

    முதல் உதவிப் பெட்டியில் வேண்டியவை
    1. ஒரங்குல பிளாஸ்திரிச் சுருள்
    2. மூன்றங்குல சதுரக் காரத் துணிகள்
    3. கிருமி நிக்கப்பட்ட பலவகை கட்டுத் துணிகள்
    4. முக்கோணக் கட்டுத் துணிகள்
    5. இரண்டு முழச் சதுரக் காரத் துணிகள்
    6. தீப்புண்ணுக்கு இடும் களிம்பு
    (அமிலக் களிம்பு சிறந்தது)
    7. அமோனிய சாராயக் கரைசல்
    (ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
    8. ௨ சதவிகித அயோடின் கரைசல்
    (ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
    9. இழுக்க நீளாத முறுக்குக் கட்டுத்துணி
    10. கத்தரிக்கோல்
    11. ௩ அங்குல நீளமுள்ள பிளவு சிம்புகள்
    ௧௨. ௧ அங்குலம், ௨ அங்குலம் அகலம் உள்ள கட்டுத்
    துணிகள்
    ௧௩. கண்ணுக்குப் பயன்படுத்தக்கூடிய கிருமி நீக்கம்
    செய்யப்பட்ட விளக்கெண்ணெய் அல்லது ஏதாவது
    கனிய எண்ணெய் (குழாய்களில் இருக்க வேண்டும்)
    ௧௪. போரிக் அமிலக் கரைசல்
    ௧௫. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண
    உப்பு குறைந்தது ௧ பவுண்டு (ஈரம்
    இல்லாதிருக்க வேண்டும்.

    விபத்து நடந்தவுடன் கவனிக்க வேண்டியவை

    ௧. விபத்து நடந்ததும், விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கப் போதுமான காற்றுக்கூட விடாமல் பலர் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு குழப்பத்தை அதிகமாக்குகிறாகள். இது தவிர்க்கப்பட வேண்டும். இத்தகையவர்களை விலக்கிவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவு செய்ய வேண்டும்.
    ௨. நீங்கள் அளிப்பது முதல் உதவிதானே ஒழிய முழுச் சிகிச்சையல்ல. எனவே விரைவாக மருந்துவருக்கு ஆள் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் ஆளிடம் என்ன நடந்தது விபத்துக்குள்ளானவரின் தற்போதைய நிலை என்ன , என்னென்ன குறிகள் காணப்படுகின்றன என்பதைச் சொல்லி அனுப்ப வேண்டும். தேவையிருந்தால் குறிப்பெழுதி கொடுத்தனுப்ப வேண்டும். அப்போது தான் டாக்டர் அதற்கேற்ப மருந்துகளையும் , கருவிகளையும் கொண்டுவர முடியும். டாக்டரின் மருந்துப் பெட்டி ஒரு முழு மருத்துவமனையல்ல. எனவே எல்லா கருவிகளையும் அவர் சுமந்து கொண்டு வரவும் முடியாது. என்ன நடந்திருக்கிறது அல்லது எந்த வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர் அறியவும், அதற்கேற்ப கருவிகளையும், மருந்துகளையும் அவர் கொண்டுவரவும் நீங்கள் அனுப்பவும் தகவல்கள் உதவ வேண்டும்.

    ௩.விபத்துகள் நேரும்போது நோயாளிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கலாம்: அவர் பல வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எந்தக் காயத்தால் அதிக ஆபத்து ஏற்பட உள்ளதோ அதற்கு முதலில் முதலுதவி அளிக்க முயல வேண்டும். அற்ப காயங்களுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய காயங்களுக்கு முதல் உதவி செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது.ஆபத்து நேரங்களில் பின்கண்ட விஶயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.: அ) மூச்சுத் திணறல் , ஆ)அதிர்ச்சி, இ) இரத்தபோக்கு, ஈ) மயங்கி மூர்ச்சையாதல்.

    ௪. சுய நினைவு இழந்தவர்களுளூக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது.

    ௫. தரையில் விழுந்து கிடக்கும் நோயாளியின் உடலில் உள்ள வெப்பம் வெகு விரைவில் தரைக்குச் சென்று விடும். எனவே , நோயாளியை ஏதாவது படுக்கையில் படுக்க வைத்து சூடு தணியாமல் போர்வையாலோ , கம்பளியாகவோ உடலை மூட வேண்டும்.

    டாக்டர் நோயாளிக்கு தரும் முதல் டானிக் தைரியம் தான். முதலுதவி செய்பவருக்கும் இது பொருந்தும். பாதிக்கப்பட்டவர் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் பார்த்துக் க் கொள்ள வேண்டும். சுற்றியிருப்போர் அழுவதும் , முதலுதவி செய்பவர் நம்பிக்கை இழந்தவராகக் காணப்படுவதும் நோயாளிக்கு பயத்தை ஏற்படுத்தலாம். அல்லது பயத்தை அதிகமாக்கலாம். நீங்கள் தரும் நம்பிக்கையே நோயாளியைக் காப்பாற்ற அதிகம் உதவும் என்பதை மறக்கக் கூடாது.

    கட்டுப் போடுதல்
    காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும். காயம் கடுமையானதாக இருக்கும் போதும், எலும்பு முறிவோ, மூட்டு நழுவுதலோ, மூட்டூப் பிறழ்ச்சியோ ஏற்படும் போதும் கட்டுப் போடுவது மிகவும் அவசியமாகிறது.

    மருந்துத் துணிகள் , பற்றுகள், சிம்புகள் போன்றவை குறிப்பிட்ட இடத்திலிருந்து நழுவாமல் இருக்கவும், அங்கம் திசுக்களுக்கு ஆதரவு அளிக்கவும் , அங்கக் குறைபாட்டைச் சீர்படுத்தவும் , இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வீக்கம் ஏற்படாமல் தடுக்க அல்லது வீக்கத்தைக் குறைக்கவும், அங்கம் அல்லது உறுப்பின் இயக்கத்திற்கு எல்லை வகுக்கவும் கட்டுக்கட்டுதல் கடைப்ப்டிக்கப் படுகிறது.

    எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகைக் கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிந்திருப்பது அவசியம். சுத்தமான பஞ்சு , துணி ஆகியவற்றையே கட்டுப்போட பயன்படுத்த ~வேண்டும். அசுத்தமான துணியால் கட்டுப்போட்டால் அதிலுள்ள கிருமிகள் காயங்களின் வழியே உடலினுள் சென்று தீங்கு விளைவிக்கலாம். கட்டுக் கட்ட பயன்படுத்தப்படும் துணி, பஞ்சு போன்றவற்றை நீராவியில் வேகவைத்து தூய்மையாக்கி, சுத்தமான காகிதம் அல்லது துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

    கட்டுத் துணிகளில் சுருள் கட்டுத்துணி, முக்கோண வடிவத்துணி, பல முனை கொண்டது போன்ற சிறப்பு வகைகள் பலவும் உண்டு.

Wednesday, October 8, 2008

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:
சத்யராஜ்
1.கடவுள்
2.மதம்
3.ஜாதி
4.சாமியார்
5.நம்ம ஊர் அரசியல்
6.ஏமாற்றுபவர்கள்
7.ஏமாறுபவர்கள்
8.பயிலாமை
9.முயலாமை
10.இயலாமை
தமிழச்சி
1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.
2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.
3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.
4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.
5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.
6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.
7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.
9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.
10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.
சுப.வீரபாண்டியன்
1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.
2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.
3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.
4.இந்துத்துவ வன்முறை அரசியல்.
5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.
6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.
7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.
8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.
9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.
10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.
நல்லகண்ணு
1.காடுகள் அழிப்பு
2.குடிதண்ணீர் வியாபாரம்
3.மணல் கொள்ளை
4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.
5.லஞ்ச ஊழல்.
6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.
7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.
8.ஜாதி மத அரசியல்
9.தாய்மொழி புறக்கணிப்பு
10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..

Tuesday, October 7, 2008

கொலு வைப்பதன் தத்துவம்!

கொலு வைப்பதன் தத்துவம்!
ஒன்பது படிகள் :நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும்.
இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.(மூலம் - வெப்துனியா)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)
இளநீரை இரத்த நீருக்குப் (Blood plasma) பதிலாக உபயோகப்படுத்த முடியும்.
எந்தக் காகிதத்தையும் பாதிப்பாதியாக ஏழுமுறைக்குமேல் மடிக்க முடியாது.
தொலைக்காட்சியைப் பார்க்கும்போது செலவழிக்கும் சக்தியைவிட நீங்கள் தூங்கும்போது அதிக சக்தியைச் செலவிடுகிறீர்கள்.
சீட்டுக்கட்டில் மீசையில்லாத ஒரே ராஜா 'ஆட்டின்' ராஜா தான்.
போயிங்757 விமானத்தின் இறக்கை ரைட் சகோதர்கள் கண்டுபிடித்த விமானத்தைவிடப் பெரியது.
கடிகாரத்தின் முட்கள் நகரும் (Clockwise) திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் தான்.
மார்ல்பரோ சிகரட் கம்பெனியின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்றுநோயினால்.
இதுவரை பதவி வகித்த எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்குக் கண்ணாடி அணிபவர்களே - சிலர் கண்ணாடியை பொதுஇடங்களில் அணிவதில்லை.
வால்ட் டிஸ்னிக்கு எலிகள் என்றால் பயம்.Richard Millhouse Nixon - இந்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரில் Criminal என்ற வார்த்தைக்கான எல்லா எழுத்துக்களும் உள்ளன.
இதே வார்த்தைகான எல்லா எழுத்துக்களும் உள்ள பெயர் கொண்ட மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி William Jefferson Clinton. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையை உணர்கின்றன.
ஒரு சூறாவளிக்காற்று பத்து நிமிடங்களில் வெளியிடும் சக்தி உலகத்தில் உள்ள எல்லா அணுயுதங்களின் மொத்த சக்தியைவிட அதிகம்.
மிருகங்களில் குதிக்க முடியாத ஒரே மிருகம் யானைதான்.200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதுக்கு மேல் வாழ்கிறார்.
பெண்கள் ஆண்களை விட இரண்டுமடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
இந்தியானாவிலுள்ள தலைமை நூலகம் ஒவ்வொரு வருடமும் ஒரு அங்குலம் கீழே இறங்குகிறது.
காரணம் அந்த நூலகத்தைக் கட்டிய பொறியாளர்கள் நூலகம் எத்தனை எடை புத்தகங்களைத் தாங்கும் என்று சரியாக கணிக்கத் தவறியதுதான்.
நத்தை சாதாரணமாக மூன்று வருடங்கள் தூங்கக்கூடும்ஆங்கிலத்தில் Month என்ற வார்த்தைக்கு எதுகையாக எந்த வார்த்தையும் கிடையாது.
நமது கண்கள் பிறந்ததிலிருந்து அதே அளவுதான் இருக்கிறது - வளர்வதில்லை. ஆனால், நமது காதுகளும் மூக்கும் வளர்வது நிற்பதே இல்லை.
எல்லாப் பனிக்கரடிகளும் இடதுகைப் பழக்கம் கொண்டவை.
TYPEWRITER என்ற வார்த்தைதான் டைப்ரைட்டரின் விசைப் பலகையின் ஒரு வரிசையில் (one row) உள்ள எழுத்துக்களிலிருந்து அமைக்கக்கூடிய நீளமான வார்த்தை.

Sunday, July 29, 2007

கோவை-தமிழகத்தின் டெட்ராய்ட்

கொங்கு மண்டலம், கோவை, கோனியம்மன்புத்தூர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுவது தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர்.
தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித் தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன.
இதமான தட்பவெப்பம், விருந்தோம்பலில் வெளுத்துக் கட்டும் இனிய மக்கள் என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் உள்ள கோவை, இப்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பச்சைக் கம்பளம் விரித்து விண்ணதிர வளர காத்திருக்கிறது.
வரலாறு:
நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோவை. மதுரைக்கு எப்படி மீனாட்சியோ அதுபோல, கோவைக்கு கோணியம்மமன். அதனால்தான் கோணியம்மன் ஆட்சி புரியும் நகரம் என்பதால் கோவை மாநகருக்கு கோணியம்மன்புத்தூர் என்றும் ஒரு பெயர் உண்டு.சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர் சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது.
கரிகால் சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் ராஷ்டிரகூடர்கள் கைக்கும் கொங்கு பூமி மாறியது. மைசூரை ஆண்ட கங்க மன்னர்கள் கையிலும் சில காலம் கோவை தவழ்ந்தது. அதன் பின்னர் சாளுக்கியர்களும், தொடர்ந்து பல்லவர்களும் கோவை மண்டலத்தை ஆட்சி புரிந்துள்ளனர். சில காலம் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கைக்கும் கோவை இடம் மாறியிருந்தது.
9வது நூற்றாண்டில் மீண்டும் சோழர் கைக்கு கோவை மாறியபோதுதான் கோவை மாநகரத்தை அழகான, திட்டமிட்ட ஒரு நகரமாக மாற்றினார்கள். நகரின் மையத்தில் கோணியம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதைச் சுற்றிலும் நகரம் உருவாக்கப்பட்டது.அந்த ஊருக்கு கோவன்புதூர் என்று பெயரும் சூட்டப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவனின் பெயர் தான் கோவன். அவரது பெயராலேயே அந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டது. இதுதான் பின்னர் கோயம்புத்தூர் என்று உருமாறியது.கோவையை வளர்த்த பெருமை இருளர் சமுதாயத்திற்கு உண்டு. ஊரைச் சுற்றிலும் அவர்கள் ஏராளமான குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர். இன்றளவும் அந்த குளங்கள் கோவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது வரலாற்றையும் மீறிய சாதனைப் பதிவு.சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வது ஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. அதன் பின்னர் 14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகம்மதியர்கள் கோவையைக் கைப்பற்றினர். மதுரையை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர்தான் கோவையையும் ஆட்சி புரிந்தார்.
14ம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம் கோவை வந்தது.தங்களது கீழ் வந்த பகுதிகளான கோவை, வேலூர், தஞ்சாவூர், சந்திரகிரி, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்களை நாயக்கர்கள் நியமித்தார்கள். இவர்களுக்கு பாளையக்காரர்கள் என்று பெயர்.இந்தக் காலகட்டத்தில் கோவை நகரமாக இருக்கவில்லை. 3000 பேர் மட்டுமே வசித்து சிறிய கிராமமமாகத்தான் இருந்தது.
1760களில் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார். அவரது நிர்வாகத்தின் கீழ் கோவை பிராந்தியமும் வந்தது. ஹைதர் அலி இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து கடுமையாக போராடினார்.மைசூர் சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. திப்பு சுல்தானின் மரணத்தோடு இந்தப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கோவையை சென்னை மாகாணத்தோடு ஆங்கிலேயர்கள் இணைத்தனர்.1804ம் ஆண்டு கோவையை தலைநகரமாகக் கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1848ம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.முதல் நகராட்சித் தலைவராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இப்படியாக நகரமாக உருவெடுத்த கோவை, மாநகரமாக அதாவது மாநகராட்சியாக 1979ம் ஆண்டு அந்தஸ்து உயரப் பெற்றது. அருகாமையில் இருந்த சிங்காநல்லூர் நகராட்சி அப்போது கோவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
கோவை சுற்றுலா:
சுற்றுலா குறித்த தகவல்களுக்கு அணுக:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.டாக்டர் நஞ்சப்பா சாலை, கோவை - 641 018.தொலைபேசி: 0422- 236311, 236324.
சுற்றுலா தலங்கள்:தாவரவியல் பூங்கா, ஊட்டி.முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.டாப் ஸ்லிப்.பரம்பிக்குளம் - ஆழியார். ஆணைமலை வன விலங்குகள் சரணாலயம். சிறுவாணி நீர் வீழ்ச்சி. பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்.
கோவில்கள்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் (கோவையிலிருந்து 7 கி.மீ). மருதமலை முருகன் கோவில் (12 கி.மீ). ஈச்சநாரி தண்டுமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்.பூண்டி அருள்மிகு கோணியம்மன் கோவில். அவிநாசி சாலை இஸ்கான் கோவில். பொள்ளாச்சி மெயின்ரோடு மகாலட்சுமி கோவில். வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ஈஷா தியான மையம். தென்திருமலை ஸ்ரீவெங்கடசலாபதி கோவில்.
பிற இடங்கள்:
தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்). மேட்டுப்பாளையம்: பிளாக் தண்டர் தீம் பூங்கா. வனவியல் கல்லூரி அருங்காட்சியகம். ஜி.டி.நாயுடு தொழில் பூங்கா. டாப் ஸ்லிப், மூணார், ஆசனூர், ஊட்டி, குன்னூர்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ்: அதி வேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நரேன் கார்த்திகேயனைக் கொடுத்த ஊர் கோவை. இங்கு கார்ப் பந்தயங்களும் புகழ் பெற்றவை.கார் பந்தயம், மோட்டார் பந்தயம், கோ கார்ட் பந்தயம் ஆகியைவ கரியப்பா மோட்டார் ஸ்பீட்வே என்ற திடலில் நடத்தப்படுகிறது.கிளப்புகள்: காஸ்மோபாலிடன் கிளப், இங்கிலீஷ் கிளப், ஃபிளையிங் கிளப்.
முக்கிய அமைப்புகள்:தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம் (கொடீஸியா), தென்னிந்திய ஜவுளி ஆய்வு கழகம் (சிட்ரா), தென்னிந்திய சோதனை மற்றும் ஆய்வு மையம் (சிதாரக்).
பிற தகவல்கள்:
தலைநகரம்: கோயம்புத்தூர்.
மக்கள் தொகை: 18,65,234 (2001 கணக்குப்படி).
கல்வியறிவு: 78 % ஆண்கள் - 81 %, பெண்கள் - 74%.
பேசும் மொழிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி, துளு, ஆங்கிலம்.
தட்பவெப்பம்: 20 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் (குளிர்காலத்தில்), 27 முதல் 36 டிகிரி செல்ஷியஸ் (கோடைகாலத்தில்).
மழைக்காலம்: மார்ச் முதல் மே வரை (தென் மேற்கு பருவ மழை), அக்டோபர் முதல் நவம்பர் வரை (வட கிழக்குப் பருவ மழை)

சேது சமுத்திரம்



நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இத்திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது என்றும், இத்திட்டம் மீனவர் உட்பட எல்லாருக்கும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து புறப்படும் கப்பல்கள் இந்தியக் கடல் வழியாக சென்று கிழக்குக் கரைத் துறைமுகங்களைச் சென்றடையும் வகையில் ஆங்கிலேயர்களால் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தயாரிக்கப்பட்டது. 1860 ல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர் என்பவரால் "ராமேஸ்வரம் கப்பல் கால்வாய்' திட்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுப் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இத்திட்டம், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1955 இல் "சேது சமுத்திரத் திட்டமாக'ப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்திய அரசால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பல இடங்களில் பல்வேறு கால கட்டங்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுத் தற்போது தனுஷ்கோடி முனையில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையிலுள்ள ஆழம் இல்லாத கடல் பகுதியில் 23 மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் மணல் திட்டுகளுக்கு இடையில் சேது கால்வாய் தோண்டுவதற்கான இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுத் தற்போது மத்திய அரசும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி முதல் மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்தைச் சுற்றிக் கொண்டு பாக்ஜலசந்தி வழியாக வங்களா விரிகுடாக் கடல் வரை 260 கி.மீ. தூரமுள்ள நீர்வழிப் பாதையில் இத்திட்டம் அமையவுள்ளது. இதற்காக ஆதாம் பாலம் (ராமர் பாலம்) துவங்கி பாக் ஜலசந்தி கடலில் 72 கி.மீ., தூரத்திற்குக் கால்வாய் தோண்டப்படவுள்ளது.மணல் திட்டுகளில் தோண்டி எடுக்கப்படும் மணலில் 10 சதவீதமான 8 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் கொட்டப்படும். இதனால் இப்பகுதியின் நிலப்பகுதி உயர்ந்து கடல் அரிப்பில் இருந்து தனுஷ்கோடி பாதுகாக்கப்படும். 300 மீட்டர் அகலத்திலும், 10.7 மீட்டர் ஆழத்திலும் தோண்டவிருக்கும் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.4 ஆண்டு கால அளவிற்குள் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் வருடத்திற்கு ரூ. 87.42 கோடி வருவாய் கிடைக்கும். 254 முதல் 424 கடல் மைல்கள் பயண தூரம் குறைவதால் 21 முதல் 36 மணி நேரம் பயண நேரமும் குறைகிறது. கப்பல்களுக்கு எரிபொருளும் மிச்சமாகிறது. சேது கால்வாய் தோண்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட மார்க்கத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தீவுகளுக்கு இத்திட்டத்தினால் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது.மன்னார் வளைகுடாத் தீவுகளில் இருந்து 20 கி.மீ., தூரத்திற்கு அப்பால் கடல் வழிப் பாதை அமைவதால் இத்திட்டத்தினால் அரிதான கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இதனை ஆதாம் பாலப் பகுதிகளைப் பார்வையிட்ட தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக துணை சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் திட்டப் பொறியாளர்கள் சேஷாத்திரி, ராமமூர்த்தி ஆகியோர் கூறினர்.சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகம் தலைசிறந்த வர்த்தகத் துறைமுகமாக மாறும். இத்துடன், இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்தும் எளிதாகி விடும். உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைவதால் நாட்டிலுள்ள சிறிய, பெரிய துறைமுகங்களில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்குவதன் மூலம் சுற்றுலாத் தொழில் மேம்படும். கடல் வாணிபம் பெருகும்.கடல் எல்லைப் பிரச்னையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் இருந்து இக்கால்வாய் வழியாக மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று இலங்கைக் கடற்படையினரின் தொல்லையின்றி மீன் பிடிக்கலாம்.இலங்கைக்குக் கொடுக்க வேண்டிய அன்னியச் செலாவணி மிச்சமாகும். ரயில் மற்றும் தரை வழி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மங்களூர் நகரங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மின்னணு நிலையம் போன்ற தொழிற்சாலைகள் உருவாகும்.கொடூரமான புயல் தாக்கி கடலுக்குள் புதைந்து போன தனுஷ்கோடி இத்திட்டத்தால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.1964 &ல் வீசிய கோரப் புயல், ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தீவான தனுஷ்கோடியை நிர்மூலமாக்கியது. கட்டடங்கள் கடலுக்குள் புதைந்து போக, ஆங்காங்கே திட்டுக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. கிழக்குக் கடற்கரையின் அழகிய தீவான தனுஷ்கோடி மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு சேது சமுத்திரத் திட்டத்தால் உருவாகி இருக்கிறது.ரூ. 2,000 கோடி மதிப்பீட்டிலான சேது சமுத்திரத் திட்டத்தில் தனுஷ்கோடியை அடுத்த ஆதம்ஸ் பாலப்பகுதியில் 20 கி.மீ., நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்படுகிறது. இதில் கிடைக்கும் களிமண்ணை, தனுஷ்கோடியில் கொட்டி 1,882 ஏக்கர் பரப்பளவு நிலம் சோலைவனமாக மாற்றப்படுகிறது.பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்ணைக் கொட்டி மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி கேட்டுத் தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதி இருக்கிறது இத்திட்டத்தை நிறைவேற்றும் அமைப்பான தூத்துக்குடி துறைமுக சபை. சேது கால்வாய்க்காகத் தோண்டப்படும் மணல், மண், கல் ஆகியவற்றில், ஒரு கோடி கனமீட்டர் அளவு களிமண் தனுஷ்கோடியில் கொட்டப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தற்போது நல்ல சாலை வசதி உள்ளது. அங்கிருந்து தனுஷ்கோடி வரை எஞ்சிய 4 கி.மீ., சாலை, மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வாடகை ஜீப்புகள் மூலமாகச் சென்று வருகின்றனர். இரு கரைகளும் வலுப்படுத்தப்பட்டு இந்தச் சாலை மேம்படுத்தப்படும்.மீனவர் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு புதிய திட்டங்கள் சேதுசமுத்திரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இதன்படி, தனுஷ்கோடியில் மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கப்படுகிறது. அத்துடன் சிறிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகமும், கப்பல்களைப் பழுதுபார்க்கும் கூடமும் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களில் மாநில அரசின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.சேதுசமுத்திரத்திட்டத்துக்கான பிரம்மாண்டமான நிர்வாக அலுவலகம் ரூ. 2 கோடி செலவில் தனுஷ்கோடியில் அமைகிறது. ரேடார் கருவிகளின் வசதியோடு கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தானியங்கி வசதி ரூ. 20 கோடியில் ஏற்படுத்தப்படும்.மேலும், மரங்கள், செடிகள், புல் தரைகள், காய்கறிகள் எனப் பசுமையான சுற்றுச் சுழலை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.மொத்தத்தில் புதிய துறைமுகங்கள், நவீன வசதிகள், நிலவள மேம்பாடு என தனுஷ்கோடியின் வளர்ச்சிக்கு ரூ. 250 கோடி வரை செலவிடப்படும். இது தமிழக அரசுக்கு நேரடியாகக் கிடைக்கிற பரிசு, மேலும் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம் இது என்கிறார் கப்பல் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு. பூம்புகாரைப் போல தனுஷ்கோடியையும் மீட்க வேண்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பம் என்கிறார் அவர்.வளப்படுத்தப்படும் 1,882 ஏக்கர் நிலத்தில், அழகான தனுஷ்கோடித் தீவை, சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக, சொர்க்க பூமியாக மாற்ற முடியும். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அப்பகுதியில் பொருளாதார வளம் மேம்படும் வாய்ப்புள்ளது.

ராமேஸ்வரம்

ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., துõரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர். சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ் சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும்.திறக்கும் நேரம்: காலை 5.30 பகல் 1 மணி, மாலை 4.30 இரவு 9 மணி..