Wednesday, December 17, 2008

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

மன்னாரன் கம்பெனி மாதிரில இருக்கு!!!!!
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!































முடியல... நண்பர்களே!!!! இந்த நிலைமை வந்தா யாரவச்சு வேலை பார்பாங்களாம்!!! அதுக்கும் ஆளுங்கள செஞ்சாலும் செய்வாங்க....





Saturday, December 13, 2008

முதல் பெண்மணிகள்

Ø உலகின் முதல் பெண் - பிரதமராய் பதவி வகித்தவர்- சரிமாவோ பண்டார நாயகே
Ø உலகின் முதல் பெண் - ஜனாதிபதியாய் பதவி வகித்தவர்- மரியா எஸ்டெலா பெரோன்
Ø உலகின் முதல் பெண் - போலஸ் - அமெரிக்காவைச் சேர்ந்த ஆலஸ்டெஃபங்ஸ் வெலஸ் - ஆண்டு 1910
Ø உலகின் முதல் பெண் - விண்வெளிப் பயணம் செய்தவர் - வாலென்டினா டெரஸ் கோவா ரஷ்யா நாள் 16.6.1963.
Ø உலகின் முதல் பெண் - விண்வெளியில் நடந்தவர் ஸ்வெட்லானா சவட்ஸ்கயா
Ø உலகின் முதல் பெண் - விமானி மிஸ்யேல் பங்கன்ஸ்பல் - இஸ்ரேல்
Ø உலகின் முதல் பெண் - பாதரியார் - பெனிலோம் ஜாமிசன் - நியுசலாந்து
Ø உலகின் முதல் பெண் - மருத்துவர் - காரட் ஆண்டர்சன்
Ø உலகின் முதல் பெண் - அறுவை மருத்துவர் - எலிசபத் பளக்வெல் - இலண்டன்
Ø உலகின் முதல் ஜ.நா. சுபையல் அங்கம் வகித்தவர்- விஜயலட்சுமி பண்டிட்
Ø உலகின் முதல் சட்டமன்றத் துணைத்தலைவர் - டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
Ø உலகின் முதல் விமான்ப் பணிப்பெண் - எலன்சர்ச்
Ø விண்ணில் உயிர் நீத்தவர் - மேரி கனீவ்
Ø சுயசரிதை எழுதியவர்- பயர்ஸ் ஒயட்
Ø ஒலிம்பிக் தீபம் ஏற்றியவர் - என்ரி குயேட்டா பாசலயோ
Ø தூதர் - ஔவையார்
Ø கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் எடுத்தவர் -சந்தியா அகர்வால்
Ø நாணயத்தில் இடம் பெற்றவர் - மர்தா வாஷிங்டன்
Ø நாட்டை ஆண்டவர் - ஹாஷெப்ஸ்ட் - எகிப்து
Ø அதிக நகை அணிந்தவர் - எலிசபெத் ஹோம்ஸ்
Ø நோபல் பரிசு பெற்றவர் - டாயல்மக் என்னும் நாவலாசரியை
Ø அதிகப் பாடல் பாடி கின்னஸில் இடம் பிடித்த்வர்-லதாமங்கேஷ்கர் (2000 க்கு மேற்பட்ட பாடல்)
Ø நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் விக்டோரியா மகராணி 63 ஆண்டுகள்.
Ø 20 ஆம் றுற்றாண்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் திருமதி. இந்திரா காந்தி.
Ø அதிக விருதுகளை பெற்ற பெண் - அன்னை தெரஸா
Ø உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பெர்தா கன்ஸ்க வான்ஸட்னர்.(ஆஸ்திரேலியா)
Ø முதல் வெளி நாட்டுத்தூதர் அலெக்சாண்டர் குலண்டாய் என்னும் இரஷ்யப் பெண்மணி (நார்வே தூதர்)
Ø உலகை நடந்தே வலம் வந்தவர் பயானோ காம்பெல்
Ø உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மனி 1934 உர்சலா பேட்ஸ்க
Ø நடிப்புக்காக நான்கு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஹேதரின் ஹெப்பர்ன்.
Ø நீண்ட கூந்தலுக்காக கின்னஸில் இடம் பெற்றவர் டயானிவட் கூந்தலன் நீளம் 12 அடி 8 அங்குலம்
Ø அதிக வயதில் பிள்ளை பெற்றவர் அமெரிக்கா கலபோர்னியாவைச் சேர்ந்த அரகல்- வயது 65
Ø தனியே வடதுருவம் அடைந்தவர் முதல் பெண் லப் ஆர்னிசன் (மோரிஸ்)
Ø நீண்ட தாடியுடைய முதல் பெண் ஜெனிபர் தாடியின் நீளம் 1 அடி 2 அங்குலம்.
Ø சிறு வயதில் (4 வயது) புத்தகம் எழுத வெளியட்டவர் டூரோத்த 1962
Ø நீர் மூழ்கக் கப்பலின் தலைமை பொறுப்பு ஏற்ற முதல்பெண் சோல்வக்கரே நார்வே நாடு
Ø அதிக வயது வரை (116) வாழ்ந்து வந்த பெண் பெலாகெயா ஜகூர்தயேவா ரஷ்யா

Friday, October 31, 2008

தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள் ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும்.

மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும். சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

Sunday, October 19, 2008

விபத்துகளும் முதலுதவியும்

இன்றைய வாழ்வில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. கையில் கத்தி போன்ற ஆயுதங்கள் பட்டு காயம் ஏற்படுவது, தீப்பட்டு புண்கள் ஏற்பட்டுவது , மின்சாரம் போன்றவற்றால் தாக்கப்பட்டு மூர்ச்ச்சை அடைவது, தவறியோ வேண்டுமென்றோ சாப்பிடக்குடாத பொருள்களைச் சாப்பிட்டு விடுவது, நீரில் மூழ்கி விடுவது இப்படி எத்தனையோ விபத்துகள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்து வருகின்றன. அவை சிறியவைகளாகவோ, பெரியவைகளாகவோ இருக்கலாம்.
இவற்றால் காயங்களும் ,அதிர்ச்சியும் , ஆபத்தும் ஏற்படுகின்றன.காயங்கள் மிகச்சிறியவையாகவும் சாதாரணமானவையாகவும் இருக்கலாம். சில நேரங்களில் அவை பலத்தவையாகவும் , உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியவையாகவும் இருக்க கூடும்.




  1. விபத்து ஏற்பட்டதும் செய்வது அறியாது திகைத்து நிற்கலாகாது. முறை தெரியாமல் சிகிச்சை அளிக்க முயன்றால் அது ஆபத்தில் முடியக் கூடும். எனவே முதல் உதவி பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. விபத்துக்கு உள்ளானவருக்கு உடனடியாகவும் , மருத்துவரின் உதவி கிடைக்கும் வரையிலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

    ஒவ்வொருவரும் முதல் உதவியைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ , அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவிப் பெட்டி ஒன்று இருப்பதும் முக்கியம். ஆனால் நம்மில் ஒரு சிலரின் வீடுகளில் தான் அதிசயமாக முதல் உதவிப்பெட்டியைக் காண முடிகிறது. பெரும்பாலனவர்களின் வீடுகளின் மூதல் உதவி பெட்டியோ அல்லது அதற்குத் தேவையான பொருட்கள் இருப்பதில்லை. வாகனங்களிலும் , பள்ளி போன்ற இடங்களிலும் முதல் உதவி பெட்டி இருப்பது அவசியம்.

    முதல் உதவிப் பெட்டியில் வேண்டியவை
    1. ஒரங்குல பிளாஸ்திரிச் சுருள்
    2. மூன்றங்குல சதுரக் காரத் துணிகள்
    3. கிருமி நிக்கப்பட்ட பலவகை கட்டுத் துணிகள்
    4. முக்கோணக் கட்டுத் துணிகள்
    5. இரண்டு முழச் சதுரக் காரத் துணிகள்
    6. தீப்புண்ணுக்கு இடும் களிம்பு
    (அமிலக் களிம்பு சிறந்தது)
    7. அமோனிய சாராயக் கரைசல்
    (ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
    8. ௨ சதவிகித அயோடின் கரைசல்
    (ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
    9. இழுக்க நீளாத முறுக்குக் கட்டுத்துணி
    10. கத்தரிக்கோல்
    11. ௩ அங்குல நீளமுள்ள பிளவு சிம்புகள்
    ௧௨. ௧ அங்குலம், ௨ அங்குலம் அகலம் உள்ள கட்டுத்
    துணிகள்
    ௧௩. கண்ணுக்குப் பயன்படுத்தக்கூடிய கிருமி நீக்கம்
    செய்யப்பட்ட விளக்கெண்ணெய் அல்லது ஏதாவது
    கனிய எண்ணெய் (குழாய்களில் இருக்க வேண்டும்)
    ௧௪. போரிக் அமிலக் கரைசல்
    ௧௫. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண
    உப்பு குறைந்தது ௧ பவுண்டு (ஈரம்
    இல்லாதிருக்க வேண்டும்.

    விபத்து நடந்தவுடன் கவனிக்க வேண்டியவை

    ௧. விபத்து நடந்ததும், விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கப் போதுமான காற்றுக்கூட விடாமல் பலர் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு குழப்பத்தை அதிகமாக்குகிறாகள். இது தவிர்க்கப்பட வேண்டும். இத்தகையவர்களை விலக்கிவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவு செய்ய வேண்டும்.
    ௨. நீங்கள் அளிப்பது முதல் உதவிதானே ஒழிய முழுச் சிகிச்சையல்ல. எனவே விரைவாக மருந்துவருக்கு ஆள் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் ஆளிடம் என்ன நடந்தது விபத்துக்குள்ளானவரின் தற்போதைய நிலை என்ன , என்னென்ன குறிகள் காணப்படுகின்றன என்பதைச் சொல்லி அனுப்ப வேண்டும். தேவையிருந்தால் குறிப்பெழுதி கொடுத்தனுப்ப வேண்டும். அப்போது தான் டாக்டர் அதற்கேற்ப மருந்துகளையும் , கருவிகளையும் கொண்டுவர முடியும். டாக்டரின் மருந்துப் பெட்டி ஒரு முழு மருத்துவமனையல்ல. எனவே எல்லா கருவிகளையும் அவர் சுமந்து கொண்டு வரவும் முடியாது. என்ன நடந்திருக்கிறது அல்லது எந்த வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர் அறியவும், அதற்கேற்ப கருவிகளையும், மருந்துகளையும் அவர் கொண்டுவரவும் நீங்கள் அனுப்பவும் தகவல்கள் உதவ வேண்டும்.

    ௩.விபத்துகள் நேரும்போது நோயாளிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கலாம்: அவர் பல வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எந்தக் காயத்தால் அதிக ஆபத்து ஏற்பட உள்ளதோ அதற்கு முதலில் முதலுதவி அளிக்க முயல வேண்டும். அற்ப காயங்களுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய காயங்களுக்கு முதல் உதவி செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது.ஆபத்து நேரங்களில் பின்கண்ட விஶயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.: அ) மூச்சுத் திணறல் , ஆ)அதிர்ச்சி, இ) இரத்தபோக்கு, ஈ) மயங்கி மூர்ச்சையாதல்.

    ௪. சுய நினைவு இழந்தவர்களுளூக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது.

    ௫. தரையில் விழுந்து கிடக்கும் நோயாளியின் உடலில் உள்ள வெப்பம் வெகு விரைவில் தரைக்குச் சென்று விடும். எனவே , நோயாளியை ஏதாவது படுக்கையில் படுக்க வைத்து சூடு தணியாமல் போர்வையாலோ , கம்பளியாகவோ உடலை மூட வேண்டும்.

    டாக்டர் நோயாளிக்கு தரும் முதல் டானிக் தைரியம் தான். முதலுதவி செய்பவருக்கும் இது பொருந்தும். பாதிக்கப்பட்டவர் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் பார்த்துக் க் கொள்ள வேண்டும். சுற்றியிருப்போர் அழுவதும் , முதலுதவி செய்பவர் நம்பிக்கை இழந்தவராகக் காணப்படுவதும் நோயாளிக்கு பயத்தை ஏற்படுத்தலாம். அல்லது பயத்தை அதிகமாக்கலாம். நீங்கள் தரும் நம்பிக்கையே நோயாளியைக் காப்பாற்ற அதிகம் உதவும் என்பதை மறக்கக் கூடாது.

    கட்டுப் போடுதல்
    காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும். காயம் கடுமையானதாக இருக்கும் போதும், எலும்பு முறிவோ, மூட்டு நழுவுதலோ, மூட்டூப் பிறழ்ச்சியோ ஏற்படும் போதும் கட்டுப் போடுவது மிகவும் அவசியமாகிறது.

    மருந்துத் துணிகள் , பற்றுகள், சிம்புகள் போன்றவை குறிப்பிட்ட இடத்திலிருந்து நழுவாமல் இருக்கவும், அங்கம் திசுக்களுக்கு ஆதரவு அளிக்கவும் , அங்கக் குறைபாட்டைச் சீர்படுத்தவும் , இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வீக்கம் ஏற்படாமல் தடுக்க அல்லது வீக்கத்தைக் குறைக்கவும், அங்கம் அல்லது உறுப்பின் இயக்கத்திற்கு எல்லை வகுக்கவும் கட்டுக்கட்டுதல் கடைப்ப்டிக்கப் படுகிறது.

    எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகைக் கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிந்திருப்பது அவசியம். சுத்தமான பஞ்சு , துணி ஆகியவற்றையே கட்டுப்போட பயன்படுத்த ~வேண்டும். அசுத்தமான துணியால் கட்டுப்போட்டால் அதிலுள்ள கிருமிகள் காயங்களின் வழியே உடலினுள் சென்று தீங்கு விளைவிக்கலாம். கட்டுக் கட்ட பயன்படுத்தப்படும் துணி, பஞ்சு போன்றவற்றை நீராவியில் வேகவைத்து தூய்மையாக்கி, சுத்தமான காகிதம் அல்லது துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

    கட்டுத் துணிகளில் சுருள் கட்டுத்துணி, முக்கோண வடிவத்துணி, பல முனை கொண்டது போன்ற சிறப்பு வகைகள் பலவும் உண்டு.

Wednesday, October 8, 2008

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:
சத்யராஜ்
1.கடவுள்
2.மதம்
3.ஜாதி
4.சாமியார்
5.நம்ம ஊர் அரசியல்
6.ஏமாற்றுபவர்கள்
7.ஏமாறுபவர்கள்
8.பயிலாமை
9.முயலாமை
10.இயலாமை
தமிழச்சி
1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.
2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.
3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.
4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.
5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.
6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.
7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.
9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.
10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.
சுப.வீரபாண்டியன்
1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.
2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.
3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.
4.இந்துத்துவ வன்முறை அரசியல்.
5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.
6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.
7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.
8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.
9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.
10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.
நல்லகண்ணு
1.காடுகள் அழிப்பு
2.குடிதண்ணீர் வியாபாரம்
3.மணல் கொள்ளை
4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.
5.லஞ்ச ஊழல்.
6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.
7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.
8.ஜாதி மத அரசியல்
9.தாய்மொழி புறக்கணிப்பு
10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..

Tuesday, October 7, 2008

கொலு வைப்பதன் தத்துவம்!

கொலு வைப்பதன் தத்துவம்!
ஒன்பது படிகள் :நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும்.
இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.(மூலம் - வெப்துனியா)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)
இளநீரை இரத்த நீருக்குப் (Blood plasma) பதிலாக உபயோகப்படுத்த முடியும்.
எந்தக் காகிதத்தையும் பாதிப்பாதியாக ஏழுமுறைக்குமேல் மடிக்க முடியாது.
தொலைக்காட்சியைப் பார்க்கும்போது செலவழிக்கும் சக்தியைவிட நீங்கள் தூங்கும்போது அதிக சக்தியைச் செலவிடுகிறீர்கள்.
சீட்டுக்கட்டில் மீசையில்லாத ஒரே ராஜா 'ஆட்டின்' ராஜா தான்.
போயிங்757 விமானத்தின் இறக்கை ரைட் சகோதர்கள் கண்டுபிடித்த விமானத்தைவிடப் பெரியது.
கடிகாரத்தின் முட்கள் நகரும் (Clockwise) திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் தான்.
மார்ல்பரோ சிகரட் கம்பெனியின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்றுநோயினால்.
இதுவரை பதவி வகித்த எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்குக் கண்ணாடி அணிபவர்களே - சிலர் கண்ணாடியை பொதுஇடங்களில் அணிவதில்லை.
வால்ட் டிஸ்னிக்கு எலிகள் என்றால் பயம்.Richard Millhouse Nixon - இந்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரில் Criminal என்ற வார்த்தைக்கான எல்லா எழுத்துக்களும் உள்ளன.
இதே வார்த்தைகான எல்லா எழுத்துக்களும் உள்ள பெயர் கொண்ட மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி William Jefferson Clinton. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையை உணர்கின்றன.
ஒரு சூறாவளிக்காற்று பத்து நிமிடங்களில் வெளியிடும் சக்தி உலகத்தில் உள்ள எல்லா அணுயுதங்களின் மொத்த சக்தியைவிட அதிகம்.
மிருகங்களில் குதிக்க முடியாத ஒரே மிருகம் யானைதான்.200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதுக்கு மேல் வாழ்கிறார்.
பெண்கள் ஆண்களை விட இரண்டுமடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
இந்தியானாவிலுள்ள தலைமை நூலகம் ஒவ்வொரு வருடமும் ஒரு அங்குலம் கீழே இறங்குகிறது.
காரணம் அந்த நூலகத்தைக் கட்டிய பொறியாளர்கள் நூலகம் எத்தனை எடை புத்தகங்களைத் தாங்கும் என்று சரியாக கணிக்கத் தவறியதுதான்.
நத்தை சாதாரணமாக மூன்று வருடங்கள் தூங்கக்கூடும்ஆங்கிலத்தில் Month என்ற வார்த்தைக்கு எதுகையாக எந்த வார்த்தையும் கிடையாது.
நமது கண்கள் பிறந்ததிலிருந்து அதே அளவுதான் இருக்கிறது - வளர்வதில்லை. ஆனால், நமது காதுகளும் மூக்கும் வளர்வது நிற்பதே இல்லை.
எல்லாப் பனிக்கரடிகளும் இடதுகைப் பழக்கம் கொண்டவை.
TYPEWRITER என்ற வார்த்தைதான் டைப்ரைட்டரின் விசைப் பலகையின் ஒரு வரிசையில் (one row) உள்ள எழுத்துக்களிலிருந்து அமைக்கக்கூடிய நீளமான வார்த்தை.